tamilnadu

கால்வாய்களை அறிவியல் பூர்வமாக தூர்வார மாநகராட்சி ஐஐடி ஆய்வு

சென்னை,நவ.26 கால்வாய்களை அறிவியல் பூர்வ மாக தூர்வார பணியை மேம்படுத்த சென்னை மாநகராட்சி  சென்னை  ஐஐடி  உடன் இணைந்து ஆய்வை  மேற் கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சி (ஜிசிசி) அண்ணாநகர் மேற்கில் மூன்று மீட்டர் அகலமுள்ள டிவிஎஸ் கால்வாயை, டி.வி.எஸ் லூகாஸ் நிறுவனத்தின் முன்பாக பாடிகுப்பம் கால்வாயை நோக்கி திருப்புவதற்கான திட்டங் களை செயல்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.

இந்த கால்வாயில் அண்ணா நகர் 3வது அவென்யூவில் உள்ள குறுகலான வழித்தடத்தில் மண்  அள்ளுவதற்கு தீர்வு காணுமாறு  மாநக ராட்சியிடம் குடியிருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாநக ராட்சி  மண்டல துணை ஆணையர் (மத்திய சென்னை)  கே.ஜே.பிரவீன் குமார் கூறியதாவது: ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாயில் 1,250 மெட்ரிக் டன் வண்டல் மண் அகற்றப் பட்டது. டி.வி.எஸ் கால்வாய், அம்பத்தூர்  தொழிற்பேட்டையில் துவங்கி குமார சாமி நகர் மற்றும் அண்ணாநகர் மேற்கு  வழியாக இரண்டு கிலோமீட்டர் தூரம் பாய்ந்து, அண்ணாநகர் ரயில் நிலையம் அருகே ஓட்டேரி நல்லா கால்வாயில் சேருகிறது.

 கால்வாய்களில் அறிவியல் பூர்வமாக தூர்வாரும் பணியை மேம்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி, ஐஐடியுடன்  ஆய்வை ஜிசிசி நடத்தி வருகிறது.  சென்னை மாநகராட்சி ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால் வாயில் தூர்வாரும் பணியை மேற் கொண்டது.  நவம்பர் 21 ஆம் தேதி நில வரப்படி வெள்ளத் தணிப்பு நட வடிக்கைகளின் ஒரு பகுதியாக மொத்தம் 1,221.32 மெட்ரிக் டன் வண்டல்  மண் இந்த கால்வாய்களில் இருந்து அகற்றப்பட்டது.

அக்டோபர் மாத பிற்பகுதியில் தொடங்கிய இந்த பணிகளில் மிதவைகள் பயன்படுத்தப் பட்டன. மற்றும் மாநகராட்சியின் விவரங்களின்படி, குவிந்துள்ள வண்டல் மண்ணை அகற்ற மண் நகரும் இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டன. இதற்கிடையில், அண்ணாநகர் குடி யிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநகராட்சி  முயற்சிகளை பாராட்டி யுள்ளது.

இது குறித்து கூட்டமைப்பின் புரவலர் புருஷோத்தம் நாயுடு கூறுகை யில், அண்ணா நகரில், 30 ஹெச்பி நீரேற்று ஏற்பாடுகளுடன் கூடிய 27,000  லிட்டர் கொள்ளளவு கொண்ட சம்ப், அப்பகுதியின் தாழ்வான பகுதியான எஸ் பிளாக்கில் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டது. ஓட்டேரி நல்லா காய்வாயில் தண்ணீரை பாய்ச்ச, குழாய்கள் அமை க்கப்பட்டன. கே4 காவல் நிலையம் அருகே தற்போதுள்ள மாற்றுக் கால் வாய் வழியாக ஓட்டேரி நல்லா நீரை கூவம் ஆற்றில் திருப்பிவிட வளைவுப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 4வது மெயின் ரோடு மற்றும் 6வது மெயின் ரோட்டில் இருந்து ஓட்டேரி நல்லா கால்வாய்க்கு பதிலாக கூவம் ஆற்றுக்கு தண்ணீர் செல்லும் சமநிலை வாய்க்கால் வரை இரண்டு புதிய வடி கால் அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.