tamilnadu

img

வடசென்னை ,தென்சென்னை மற்றும் திருப்பெரும்புதூர் வேட்பாளர் பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வடசென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசினார்.


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை மக்களவைத்தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விருகம்பாக்கம் பகுதி, சூளைப்பள்ளம் (137வது வட்டம்) மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் சி.செங்கல்வராயன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் தொடங்கிவைத்தார்.


திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியின் வடசென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் டாக்டர்.கலாநிதிவீராசாமி, பெரம்பூர் சட்டமன்ற இடைத் தேர்தல் வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் ஞாயிறன்று (ஏப். 14) பெரம்பூர் பகுதியில் வீதி வீதியாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கோரி பிரச்சாரம் செய்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பத்தூர் சோழபுரம் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். இதில் என்.கணேசன், மாறன், சுந்தர்ராஜன், மணி, ரேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;