tamilnadu

img

விவசாய தொழிலாளர்களிடம் பிரச்சாரம்

திருவண்ணாமலை, ஏப். 12-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆரணி தொகுதி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் தை ஆதரித்து சிபிஎம் வந்தவாசி வட்டக்குழு சார்பில் செயலாளர் ஜா.வே.சிவராமன் தலைமையில் பெரணமல்லூர் பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது.பெரணமல்லூர், அரியாபாடி, இஞ்சிமேடு, நம்பேடு, அல்லியந்தல், சந்திராம்பாடி,செப்டாங்குளம் கிராமங்களில் விவசாய தொழிலாளர்களிடம் பிரச்சாரம் நடத்தப் பட்டது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் ந. சேகரன், வட்டக்குழு உறுப்பினர் ந. இராதாகிருஷ்ணன், கிளைச் செயலாளர் ராஜசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மத்திய பாஜக அரசு மற்றும் அதன் எடுபிடி மாநில அதிமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்துச் சொல்லியும், மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க கோரியும் நடந்த பிரச்சாரத்திற்கு கிராம மக்கள் சிறப்பாக ஆதரவளித்தனர்.

;