tamilnadu

img

திருவண்ணாமலையில் பிரச்சார இயக்கம் நிறைவு

திருவண்ணாமலையில் பிரச்சார இயக்கம் நிறைவு

திருவண்ணாமலை, ஜூன் 20- திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற மக்கள் சந்திப்பு கிளர்ச்சி பிரச்சார இயக்கம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டிக்கும் நோக்கத்துடனும், தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும் நடத்தப்பட்ட இந்த இயக்கம் பரவலான மக்கள் ஆதரவைப் பெற்றது. வேலூர் சாலை அண்ணா நுழைவு வாயில் அருகில் இருந்து தொடங்கிய பிரச்சார ஊர்வலத்தில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்ட நிலை யில் அண்ணா சிலை அருகே சென்று நிறைவு பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ப. செல்வன் தலைமை தாங்க, மாநகர செயலாளர் எம். பிரகலநாதன் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் எம். ஜெயசீலன் தனது உரையில், “ஒன்றிய பாஜக ஆட்சியில் நாட்டில் நாற்பது சதவீத சொத்துக்களை நூற்று அறுபது குடும்பத்தினர் கைப்பற்றியுள்ளனர். இவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 49 கோடி ரூபாய் வருமானமாக கிடைக்கிறது. மறுபுறம் நாட்டின் 81 கோடி மக்கள் நூறு நாள் வேலை, ரேசன் கடை, மூட்டை தூக்கும் வேலையை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டார். மாநிலக்குழு உறுப்பினர் எம். சிவக்குமார் பேசுகையில், “முந்தைய அதிமுக ஆட்சியின் போது உதய் மின் திட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படை யில் வரும் ஜூலை முதல் தேதியிலிருந்து மின் கட்டண உயர்வு ஏற்படும் ஆபத்து நிலவுகிறது” என்று எச்சரித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், கே. வாசுகி, இரா.பாரி, என.லட்சுமணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கே. கே. வெங்கடேசன், ஆர். அண்ணாமலை, கே. காங்கேயன், ச குமரன், மகேஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செய்யாறில்  மாநிலச் செயலாளர் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில்  வட்டார செயலாளர் சதீஷ், அப்துல் காதர், பிர பாகரன், ரவிதாசன், எல்லப்பன், ரமேஷ் பாபு, சிவாஜி, சுந்தர், ச. குமரன், சுகுணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தண்டராம்பட்டு ஒன்றியம் சார்பில் நடை பெற்ற பிரச்சார இயக்கத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமதாஸ், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.அண்ணா மலை, கமிட்டி உறுப்பினர் தணிகாசலம், கோபி,ரவி, பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.