tamilnadu

img

பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம்

சென்னை, மார்ச் 24- சென்னையில் ஞாயிறன்று (மார்ச் 24) மக்கள் நீதி மய்  யம் கட்சியின் தேர்தல் பரப் புரை வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது. இதில் அவர்  பேசியதன் சுருக்கம்:

மக்களவைத் தேர்தல் பரப்பு ரையில் நேரடியாக ஈடுபட உள்  ளேன். எனது எதிரி யார்  என்பதை முடிவு செய்துவிட்  டேன். எனக்கு நினைவு தெரிந்  ததில் இருந்தே எனக்கு சாதி யம் தான் எதிரி. 70 ஆண்டு களுக்கு முந்தைய சாதியத்தை  மீண்டும் தூக்கிப் பிடிக்க பாஜக முயற்சிக்கிறது. சாதியம் பேசாதே  என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவர்கள்தான் இன்று வெள்ளை தாடியுடன் இங்கே அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு மறுபடியும் சாதி யை கற்றுக்கொடுக்கும் ஒரு  மாபெரும் திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கும் ஒரு கட் சியோ, ஒரு திட்டமோ எத்  தனை பெரியதாக இருந்தா லும், அதை தகர்க்க வேண்டி யது என் கடமை. 

திமுகவை விமர்சித்து, ரிமோட்டை எடுத்து டிவியில்  அடித்தீர்களே? நீங்கள்தானே இப்போது அங்கு செல்கிறீர் கள் என்று கூறுகின்றனர். ரிமோட் இன்னும் என் கை யில்தான் உள்ளது. டிவியும் இன்னும் அங்கேதான் இருக்கி றது. ஏனெனில், நம்ம வீட்டு  டிவி, நம்ம வீட்டு ரிமோட்.  ஆனால், அந்த டிவிக்கான  கரண்டையும், ரிமோட்டுக் கான பேட்டரியையும் மத்தி யில் உருவாக்கும் ஒரு சக்தி  உருவாகிக் கொண்டிருக்கி றது. எனவே, ரிமோட்டை இனி மேல் நான் எறிந்தால் என்ன?  வைத்திருந்தால் என்ன? அது போன்ற செய்கைகளுக்கு இனிமேல் அர்த்தமே இல்லா மல் போய்விடும். மாநில அர சின் உரிமைகளை ஒன்றிய அரசு  பறிப்பதால்தான் திமுக கூட்ட ணியை ஆதரிக்கிறேன்.

மார்ச் 29 முதல் சுற்றுப்பயணம்

மக்களவைத் தேர்தலில், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி  மய்யம், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், மக்கள்  நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மார்ச் 29 முதல் திமுக கூட்டணியை  ஆதரித்து 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்  கப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 29 - ஈரோடு, மார்ச் 30 - சேலம்,  ஏப்ரல் 2 - திருச்சிராப்பள்ளி, ஏப்ரல் 3 - சிதம்பரம், ஏப்ரல் 6 - ஸ்ரீபெரும்புதூர்,  சென்னை, ஏப்ரல் 7 - சென்னை, ஏப்ரல் 10 - மதுரை, ஏப்ரல் 11 - தூத்துக்குடி,  ஏப்ரல் 14 - திருப்பூர், ஏப்ரல் 15 - கோவை, ஏப்ரல் 16 - பொள்ளாச்சி  ஆகிய இடங்களில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.