tamilnadu

img

மார்ச் 4, 5 ல் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் வரும் மார்ச் 4,5 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 3-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
4-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.
5-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மார்ச் 2-ம் தேதி (இன்று) தெற்குவங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளிலும், 3-ம்தேதி தெற்கு வங்கக்கடல், அதைஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளிலும் மணிக்கு60 கி.மீ. வேகம் வரை சூறாவளிக்காற்று வீசும். 4-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டியமத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, தெற்கு ஆந்திரகடலோரப் பகுதி, தமிழக கடலோரப் பகுதி, குமரிக் கடல் பகுதிகளிலும், 5-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் சூறாவளிக் காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.