tamilnadu

img

திருத்தப்பட்ட நடைமுறையால் பயன்பெறும் எஸ்சி-எஸ்டி மாணவர்கள்

சென்னை, ஆக. 26 - பட்டியலினத்தைச் சேர்ந்த பட்டதாரி மாணவர்கள் வெளிநாடுகளில் உயர் கல்வி பயில்வதற்கான உதவித் தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பி னும், இத்திட்டத்தில் உள்ள நடை முறை சிக்கல்கள் காரணமாக ஒரு சில பட்டதாரிகள் மட்டுமே பயன்பெற்றுள்ளனர்.

இந்த குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை யானது, இத்திட்டத்தின் மூலம் பய னடைய கூடியவர்களின் உச்ச வரம்பு உள்ளிட்ட பல விதிகள் மறு சீரமைக்கப்பட்டதன் மூலம் ஏராள மானோர் உயர்கல்வி பயில்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல் களின்படி, 8 லட்சத்துக்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்ட பட்டிய லின சமூகங்களைச் சேர்ந்த பட்ட தாரிகள், வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயில ஆண்டுக்கு 36 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை பெற வாய்ப்பு ஏற்பட்டது. முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு 35 வயதுக்கும், முனைவர் பட்டப் படிப்புக்கு 40 வயதுக்கும் குறைவாக இருக்க வேண்டும். மாற்றி அமைக்கப் பட்ட விதிகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 120 பட்டதாரிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

பட்டியலின மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில்வது அதிகரித்துள்ளதாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ஜி. லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் இவ்வாண்டு 75 பட்டியலின மாணவர்கள் வெளி நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங் களில் முதுநிலை கல்வி பயில தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.