சென்னை,பிப்.24- நெம்மேலியில் ரூ.1516.82 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலை செயல் பாட்டுக்கு வந்துள்ளதால் சென்னைக்கு கூடுதலாக நாளொன்றுக்கு 15 கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கும்
சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகை யில், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலை யங்களை வடிவமைத்து, நிறுவி, இயக்கி மற்றும் திருப்பித் தரும் அடிப்படையில் மீஞ்சூரில் நாளொன் றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் அடிப்படையில் கடந்த 2007 ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி அப்போ தைய உள்ளாட்சித் துறை அமைச்சரு மான மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டு 2010 ஆம்ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் தேதி இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையத்திலிருந்து கிடைக்கக் கூடிய குடிநீர் மூலம், வடசென்னை பகுதிகளான மணலி, மாதவரம், எண்ணூர், கத்திவாக்கம், திருவொற்றி யூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்கள் பயன் பெற்று வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து, நெம்மேலியில் நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான திட்டப் பணிகளை அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டா லின் 2010 ஆம்ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
தென்சென்னை பகுதிகள்
இந்நிலையத்தின் மூலம், தென்சென்னை பகுதிகளாகிய சோழிங்கநல்லூர், நீலாங்கரை, ஈஞ்சம் பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி, கொட்டி வாக்கம், பாலவாக்கம், திருவான்மி யூர், வேளச்சேரி, தரமணி, பள்ளிப்பட்டு, அடையாறு, பெசன்ட் நகர், நந்தனம், எம்.ஆர்.சி. நகர், ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
40 கோடி லிட்டர் தண்ணீர்
இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் வளர்ச்சியினை தொடர்ந்து சென்னைக்கு அருகாமை யில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாலும், வளர்ச்சிக் கேற்ப சீரான குடிநீர் வழங்கும் பொருட்டும், பேரூரில் நாளொன்றுக்கு 40 கோடி லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதனடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூ ரில் நாளொன்றுக்கு 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலை யத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமைய உள்ளது. இந்நிலையம் அமைக்கும் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நெம்மேலியில் 1516 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 15 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக் காக முதல்வர் ஸ்டாலின் சனிக்கிழமை (பிப்.24) தொடங்கிவைத்தார்.