tamilnadu

img

கோவிஷீல்டு தடுப்பூசியால் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை

சென்னை, மே 12 - கோவிஷீல்டு தடுப்பூசி யால் தமிழ்நாட்டில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்று  தமிழக மருத்துவம் - மக்கள் நல்  வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள் ளார்.

சென்னையில் செய்தியா ளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகை யில், “கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்த  விதமான தடுப்பூசியாக இருந் தாலும் அவரவர் உடலில் உள்ள  நோய் எதிர்ப்பு திறனை பொறுத்துத்தான் பின் விளைவு கள் இருக்கும்.

ரத்தம் உறைதல் மாதிரி யான பிரச்சனைகள் சிலருக்கு  இருக்கலாம். ஆனால் இது வரை அது போன்ற பாதிப்புகள் வெளியில் தெரியவில்லை.  கோவிஷீல்டு தடுப்பூசி போட்  டுக் கொண்டவர்கள் பயத்து டனே வாழ வேண்டும் என்ற அவ சியம் இல்லை. 

நோய் எதிர்ப்பு சக்தி தங்கள்  உடலில் குறையாத வண்ணம் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்து நடப்பது உள்ளிட்ட உடற்பயிற்சி களை செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள  வேண்டும். தமிழ்நாட்டில் இது வரை எங்கும் கோவிஷீல்டு தொடர்பான பக்கவிளைவு சம்  பந்தமாக எந்த பாதிப்பும் பதி வாகவில்லை என்று தெரிவித் தார்.

மேலும் செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், திமுக அரசு பொறுப்  பேற்றதற்குப் பிறகு 1,912 ஒப்  பந்தச் செவிலியர்கள் பணி யில் அமர்த்தப்பட்டிருக்கிறார் கள். ஏற்கெனவே ஒப்பந்தச்  செவிலியர்களாக இருந்தவர் களுக்கு ரூ.16 ஆயிரம் சம்ப ளம் வழங்கப்பட்டிருந்தது. அது  ரூ.18 ஆயிரமாக உயர்த்தப் பட்டது. அதோடு மட்டுமல்  லாது ஒப்பந்த செவிலியர் களாக மருத்துவ தேர்வாணை யம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள் பல ஆண்டு காலமாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருந்தார்கள். திமுக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு 1,912 எம்.ஆர்.பி. ஒப்பந்த செவி லியர்கள் நிரந்தர செவிலி யர்களாக பணியில் அமர்த்தப் பட்டிருக்கிறார்கள் என்று கூறி னார்.