tamilnadu

img

விழுப்புரத்தில் பட்டினியால் சிறுவன் சாவு: அடையாளம் காண திணறும் காவல்துறை!

விழுப்புரம்,டிச.23- விழுப்புரம் மேல்தெரு பகுதியில் கடந்த 15 ஆம் தேதி துணிகளை இஸ்திரி செய்ய பயன்படுத்தப்படும் தள்ளுவண்டியில் 4 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். அவ னது  உடலை காவல்துறையினர்  கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சிறுவனின் உணவுக்குழாயில் 2 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாததால் அவன் உணவின்றி பட்டினியால் இறந்திருப்பதும் தெரிய வந்தது.  இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மேற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவன் குறித்து விசாரித்து வருகிறார்கள். காவல்துறை ஆய்வாளர் செல்வ ராஜ், உதவி ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர், சிறு வன் எந்த ஊரை சேர்ந்தவன், அவனது பெற்றோர் யார் அவனை இங்கு கொண்டு வந்து போட்டு சென்றது யார்?  என்பதை கண்டுப்பி டிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். விழுப்புரம் நகரிலுள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, அதனை பார்வையிட்டனர். அப்போது,  விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், திருச்சி நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் இருக்கும் கேம ராக்களில், கடந்த 14 ஆம் தேதி நள்ளிரவு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அந்த சிறுவனை துணியால் மூடியபடி  தனது தோளில் சுமந்தபடி நடந்து செல்வதும், அந்த நபருடன் சுமார் 55 வயது மதிக்கத்தக்க மற்றொரு நபரும் உடன் செல்வதும் பதிவாகியுள்ளது.

மேல்தெரு பகுதி சென்றதும் அங்குள்ள தள்ளுவண்டியில் துண்டை விரித்து அதன் மீது அந்த சிறுவனை படுக்க வைத்துவிட்டு பின்னர் மீண்டும் அவர்கள் இருவரும் அங்கிருந்து நடந்தே புதிய பேருந்து நிலையம் வந்து பேருந்து ஏறிச்சென்றதும் சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகியுள்ளது.  சம்பவத்தன்று நள்ளிரவு 12 மணி முதல் 1.30 மணிக்குள் சிறுவனை தள்ளு வண்டியில் போட்டுவிட்டு பேருந்து ஏறிச்சென்றிருப்பதாக சி.சி.டி.வி. காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் அவர்களது முகம், சி.சி.டி.வி. காட்சியில் தெளிவாக பதிய வில்லை. இதனால் அவர்களை எளிதில் அடையாளம் காண்பதில் காவல்துறை யினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.  சிறுவனின் சட்டை காலரில் தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ். ஸ்டிக்கர் இருப்ப தால் அனைத்து அங்கன்வாடி ஊழி யர்களின் வாட்ஸ்-அப் குழுக்களுக்கும் சிறுவனின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை அனுப்பி இதுபற்றி தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் வாட்ஸ்-அப் குழுக்களுக்கும் இது பற்றி விவரங்கள் அனுப்பப்பட்டு ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரி விக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக மாவட்ட காவல்துறை வட்டாரம்  தெரிவித்துள்ளது, சிறுவன் மரணத்தில் காவல்துறையினர் திணறி வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.