கேரள பாஷா நிறுவனமும், சென்னை மலையாளர்கள் கூட்டமைப்பும் இணைந்து கேரளசமாஜத்தில் ஒரு வாரம் நடத்திய புத்தக திருவிழா ஞாயிறன்று (ஆக.4) நிறைவுபெற்றது. இதில் கேரளா முன்னாள் அமைச்சர் எம்.எ.பேபி பங்கேற்றார். இந்த புத்ததிருவிழாவில் 400 தலைப்பில், 40 ஆயிரம் புத்தகங்கள் விற்பனைக்கண்காட்சியில் வைக்கப்பட்டது. கலை இலக்கியப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.