சென்னையில் ஜனவரி 3-ஆம் தேதி புத்தகக் காட்சி தொடங்க இருக்கிறது.
47-ஆவது சென்னை புத்தக காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜன.3 முதல் ஜன.21 வரை நடைபெற உள்ளது.ஜன.3-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இப்புத்தக காட்சியில் ஆயிரக்கணக்கான புத்தக கடைகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது.
மேலும், எழுத்தாளர்கள், அறிஞர்கள், பேச்சாளர்களின் சிறப்புரைகளும், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது.