கள்ளச்சாராயத்தை எதிர்த்து போராடி உயிர் தியாகம் செய்த தோழர்கள் கடலூர் குமார் மற்றும் ஆனந்தன் 25ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, போதை பழக்கத்திற்கு எதிரான முழக்கத்தை முன் வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வட சென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதி முத்தமிழ் நகர் கிளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் என்.ரவிச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை மருத்துவர் நவீன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் நித்தியராஜ், மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணதமிழன், பகுதி செயலாளர் கார்த்திக், வடசென்னை ரத்ததான கழக பொறுப்பாளர் ஜபருல்லாகான், நிர்வாகிகள் நவீன், கார்த்திக் தங்கராஜ், பிரகாஷ், பிரேம், தினேஷ் பாலாஜி, சுகுமார் தங்கராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.