tamilnadu

img

ஒன்றிய தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக கருப்பு நாள்

சென்னை, செப். 23- தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளையும், புதிய குற்றவியல் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி செப். 23, 24 ஆகிய இரு நாட்களை கருப்பு  நாட்களாக அனுசரித்து இயக்கம் நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. 

இதனையொட்டி சென்னை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் திங்களன்று (செப்.23) சென்னையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன், தொமுச பொருளாளர் கி. நடராஜன், ஏஐடியுசி பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சம்பத் (உழைக்கும் மக்கள் மாமன்றம்), சுப்பிரமணியபிள்ளை (எச்எம்எஸ்), பா. பால கிருஷ்ணன் (ஐக்கிய விவசாயிகள் முன்னணி), ஏ.எஸ். குமார் (எல்டியுசி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.