“இந்தியாவின் பன்முகத்தன்மையை உறுதி செய்கிற அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க பாஜக முற்படுகிறது. இனி பாஜக ஆட்சி அமைத்தால் அதிபர் ஆட்சிதான். எனவே, தற்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் அல்ல, நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம். ஜனநாயகத்தை மீட்டு நமது உரிமைகளைக் காக்க வேண்டும். பாசிச பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்” என்று விசிக பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி வேட்பாளருமான து. ரவிக்குமார் பேசியுள்ளார்.