tamilnadu

மாநிலத்தின் வேலைவாய்ப்பை பாதுகாக்க பாஜகவை வீழ்த்த வேண்டும்

சென்னை, ஏப். 16 – மாநிலத்தின் வேலைவாய்ப்பை பாதுகாக்க பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்று தயாநிதிமாறன் கூறினார்.  மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி  மாறன் திங்களன்று (ஏப்.15) சேப்பாக்கம் பகுதி, அண்ணாநகர், ஆயிரம் விளக்கு பகுதிகளில் வாக்கு  சேகரித்தார். அப்போது இவர் பேசியதன் சுருக்கம் வருமாறு:

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்றப்படும். இந்திய  கிரிக்கெட் அணி ‘பாரத் கிரிக்கெட்’ அணி என்று மாறும்; வீரர்களின் டி-சர்ட்டுகள் காவி நிறத்துக்கு மாற்றப்படும். இந்தியன் போலீஸ் சர்வீஸ் என்பது பாரத் போலீஸ் சர்வீசாகும். அதாவது ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பொறுப்புகள் பிஏஎஸ், பிபிஎஸ் என்று மாற்றமடை யும். உணவில் அரசியல் தலை தூக்கும். அசைவம் உண்பதை தடுப்பார்கள். ஒரே நாடு ஒரே  தேர்தல் முறையால் மாநில கட்சி களின் அதிகாரம் பறிக்கப்படும்.

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்க ளுக்கு கிடைக்க வேண்டிய எந்த நன்மையும் கிடைக்காது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு கள் பறிபோகும். அனைத்து பணி களிலும் வட மாநிலத்தவரே புகுத்தப் படுவார்கள். பெயருக்குப் பின்னால்  சாதியை போட்டுக் கொள்ளும் அவலம் உருவாகும். கார்ப்பரேட்டுகளுக்காகவும், மதவாத அரசியலுக்காகவும் சட்டங்கள் திருத்தப்படும். இந்திய அரசியல் சட்டம் மாற்றப்படும். சிஏஏ போன்று இன்னும் பல கொடூர  சட்டங்கள் உருவாகும்; சிறுபான்மை யினரின் உரிமைகள் நசுக்கப்படும்.  

மதக் கலவரங்கள் உருவாக்கப்படும். பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்தி ரம் பறிக்கப்படும். கேள்வி கேட்ப வர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படு வார்கள். இட ஒதுக்கீடு முறை நீக்கப்ப டும். அனைத்து படிப்புகளுக்கும் நீட் போன்ற தகுதித் தேர்வுகள் நடத்தப்படும். அரசுக் கல்வி நிறுவனங்கள் முழுமையாக தனி யாருக்குத் தாரை வார்க்கப்படும். அரசுப் பள்ளிகள் படிப்படியாக மூடப்படும். இந்தி, குலத்தொழில் முறை கட்டாயமாக்கப்படும். அரசின் பொதுத்துறை நிறுவனங் கள் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படும். இவற்றையெல்லாம் தடுக்க, மாநில உரிமைகளை பாதுகாக்க இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

 சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே. சிற்றரசு, எம்.கே. மோகன் எம்எல்ஏ., திமுக பகுதிச் செயலாளர்கள் மதன் மோகன் (சேப்பாக்கம்), ச. பரமசிவம் (அண்ணாநகர்), வினோத் வேலாயு தம் (ஆயிரம் விளக்கு), சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, பகுதிச் செயலாளர்கள் ஆர்.கபாலி,  கே.மகேந்திரவர்மன், வே.இரவீந்திர பாரதி  உள்ளிட்ட கூட்டணி கட்சியி னர் கலந்து கொண்டனர்.