உத்தரப்பிரதேச மாநிலத்தி்ன் துத்தி தொகுதியின் எம்எல்ஏ-வாக இருப்பவர் ராம்துலர் காண்ட். பாஜகவைச் சேர்ந்தவரான இவர் கடந்த 2014இல் சோன்பத்ரா அருகே உள்ள கிராமத்தில் 9 வயது சிறுமியை ஆசைவார்த்தைக் கூறி பலமுறை பலாத் காரம் செய்துள்ளார். பலாத்கார சம்ப வம் நடந்தபோது, ராம்துலர் காண்ட் மனைவி கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மூத்த சகோதரரிடம் கூற, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகா ரின் அடிப்படையில் மயோர்பூர் போலீசார் போக்சோ வழக்கின் கீழ் விசாரணை மட்டுமே மேற்கொண்டனர். ஆனால் ராம்துலர் காண்டை கைது செய்ய வில்லை. வழக்கு போக்சோ சிறப்பு நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.உத்தரப்பிரதேச மாநிலத்தி்ன் துத்தி தொகுதியின் எம்எல்ஏ-வாக இருப்பவர் ராம்துலர் காண்ட். பாஜகவைச் சேர்ந்தவரான இவர் கடந்த 2014இல் சோன்பத்ரா அருகே உள்ள கிராமத்தில் 9 வயது சிறுமியை ஆசைவார்த்தைக் கூறி பலமுறை பலாத் காரம் செய்துள்ளார். பலாத்கார சம்ப வம் நடந்தபோது, ராம்துலர் காண்ட் மனைவி கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மூத்த சகோதரரிடம் கூற, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகா ரின் அடிப்படையில் மயோர்பூர் போலீசார் போக்சோ வழக்கின் கீழ் விசாரணை மட்டுமே மேற்கொண்டனர். ஆனால் ராம்துலர் காண்டை கைது செய்ய வில்லை. வழக்கு போக்சோ சிறப்பு நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
பாலியல் வன்கொடுமை குற்றத்தில் தொடர்புடையவராக இருந்தாலும் 2022 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட ராம்துலர் காண்ட் டிற்கு பாஜக சீட் வழங்கியது. மீண்டும் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார் ராம் துலர் காண்ட்.
இந்நிலையில், கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு ராம்துலர் காண்ட்டின் பாலி யல் வன்கொடுமை வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற் றப்பட்டது. இந்த வழக்கு செவ்வாயன்று விசாரணைக்கு வந்த நிலையில், 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக எம்எல்ஏ ராம்துலர் காண்ட் குற்றவாளி என்றும், அவர் மீதான தண் டனை விவரம் டிசம்பர் 15 அன்று அறி விக்கப்படும் என சிறப்பு நீதிமன்ற நீதி பதி தீர்ப்பளித்தார். இதையடுத்து பாஜக எம்எல்ஏ ராம்துலர் காண்ட் கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ராம்துலர் காண்ட் போக்சோ வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தால், அவருக்கு குறைந்தது 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள் ளது. குற்றவழக்குகளில் எம்பி அல்லது எம்எல்ஏ 2 ஆண்டுகளுக்கு மேல் தண் டனை பெற்றால், அவர்கள் தானாகவே பதவி இழக்கிறார்கள் என உச்சநீதிமன் றம் கடந்த 2013இல் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ராம்துலர் காண்ட் தனது எம்எல்ஏ பதவியை இழந்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.