பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேரந்திரனின் மகன் நயினார் பாலஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை - விருகம்பாக்கம் பகுதியில் 100 கோடி மதிப்பிலான நிலத்தை திருநெல்வேலி ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நைனார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி, இளையராஜா என்னும் நபர் மற்றும் ராதாபுரம் சார்பதிவாளர் சேர்ந்து ஜூலை 2022 இல் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
இதில் மோசடி நடைபெற்றதாக்கூறி அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் ஏப்ரல் 2023 இல் தலைமை செயலர், பத்திர பதிவுத்துறை அமைச்சர், பத்திரப்பதிவுத்துறை செயலர்கள் மற்றும் சென்னை காவல் துறை ஆணையர் என அனைவருக்கும் புகார் அனுப்பியிருந்தது.
அதன் மீது விசாரணை மேற்கொண்ட திருநெல்வேலி துணை பத்திர பதிவுத்துறை தலைவர், இது மோசடி ஆவணம் என்று ஆணையிட்டு இந்த ஒப்பந்த பத்திரப்பதிவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.