சென்னை, மார்ச் 30- சமூக நீதியை ஒழிக்கத் துடிக்கும் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி களுக்கு பாடம் புகட்டுவீர் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவெல்ல பிரசாத் கேட்டுக் கொண்டார்.
திருவள்ளூர் மக்களவைத் தொகுதி யில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் போட்டி யிடுவதையொட்டி மாதவரத்தில் செயல் வீரர்கள் கூட்டம் சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ தலைமை யில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு ஸ்ரீவெல்ல பிரசாத் பேசுகையில், இந்த மக்கள வைத்தேர்தல் 2 கட்சிகளுக்கு இடை யிலான தேர்தல் இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தை, ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்கும் இந்தியா கூட்ட ணிக்கும், இவற்றை சீரழிக்கத் துடிக்கும் பாஜக கூட்டணிக்கும் இடையே நடைபெறும் தேர்தல் என்றார்.
இந்திய தேசத்தை மதத்தின் பெயரால் பாஜக பிளவுபடுத்த பார்க்கி றது. நாடு பிளவுபட்டால் என்னவாகும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை நம்முன் உள்ளது. அதிமுகவும், பாஜகவும் தேர்தலுக்கு பிறகு ஒன்று சேர்ந்து விடு வார்கள். அதிமுகவிற்கு அளிக்கும் வாக்கு பாஜகவிற்கு அளிக்கும் வாக்கு என்பதை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
சமூக நீதியை ஒழித்து, நாட்டை பிளவுபடுத்த துடிக்கும் பாஜக கூட்ட ணிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மங்களுரை சுடுகாடாக மாற்றிய பாஜக
வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பேசுகையில், கர்நாடகாவில் மாவட்ட ஆட்சியராக 10 ஆண்டுகாலம் பணி புரிந்தேன். 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில் வன்முறை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது என்று ஆய்வு செய்யும் போது, வன்முறை சம்பவத்தை அரசே அரங்கேற்றியது தெரிய வந்தது. ஏறக்குறைய 3,000 பேர் கொல்லப்பட்டனர். நாமெல்லாம் அரசு என்றால் மக்களை பாதுகாக்கும் என்று தான் நம்புகிறோம். ஆனால் அரசே மக்களிடையே கலவரத்தை தூண்டி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. அதன்பிறகு 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மங்களூர் என்ற அழகான நகரத்தில் கலவரத்தை தூண்டி இப்போது சுடுகாடாக மாறிவிட்டது. சுற்றுலா, வணிகம் என அனைத்தும் பாதிக்கப்பட்டு விட்டது.
திறந்தவெளிசிறைசாலை
2019ஆம் ஆண்டு ராணுவத்தின் மூலம் காஷ்மீரை சுற்றி வளைத்து, மக்களை வீட்டுக்குள் உட்கார வைத்து மாநிலத்தையே சிறைச்சாலையாக மாற்றினார்கள். இவர்களின் வருகை யால் இந்த நிலை தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. இந்த பாசிச ஆட்சிக்கு எதிராக போராட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பதவியை ராஜினாமா செய்து விட்டுத்தான் இந்த களத்திற்கு வந்திருக்கிறேன். தற்போது திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறேன். என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தால் 5 ஆண்டுகாலம் உங்களுடன் இணைந்து தொகுதிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல் படுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன் என்றார்.
இதில் தொகுதி பொறுப்பாளர் இரா.கிரிராஜன், மாதவரம் தொகுதி பொறுப்பாளர் நா.சந்திரபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், காங்கிரஸ் மாவட்டச்செயலாளர் ஆர்.எம்.தாஸ், சிபிஐ மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி, விசிக மாவட்டச் செயலாளர் சா.இளங்கோ வன், மதிமுக மாவட்டச் செயலாளர் டி.சி.ராஜேந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பேசினர்.
கூட்டத்தில் ஜி.துக்காராம், எம்.நாராயணன், பெ.சரவணன், மி.வெ.கருணாகரன் (திமுக), என்.வெங்கடே சன், எம்.சந்திரசேகர் (காங்கிரஸ்), வீ.ஆனந்தம், வி.கமலநாதன் (சிபிஎம்), அஜய்கோஷ், திலீப்குமார் (சிபிஐ), சந்திரபோஸ், இரா.திருமலை, பா.தமிழ் செல்வன் (விசிக), பாண்டியன், பன்னீர் செல்வம் (மதிமுக) உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.