சென்னை, மார்ச் 25- தமிழ்நாட்டில் வெற்றிபெற்று விடலாம் என்ற பாஜகவின் கனவு எந்த ஜென்மத்திலும் பலிக்காது என திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், தில்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர களைச் சந்தித்துப் பேசும்போது, “தற்போது வரவுள்ள தேர்தல் அனைவருக்கும் முக்கியமான தேர்தல். காங்கிரஸ் கட்சிக்கு மட்டு மல்லாமல், ஜனநாயகத்திற்கும் முக்கியமான தேர்தலாக உள்ளது. வரலாறு காணாத வெற்றியை ஜன நாயக கட்சிகளுக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கி றேன்.
பாஜகவினர் விமர்சனத்தில் குறைந்தபட்ச நம்பிக்கைத் தன்மை கூட இருக்காது. அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவை இல்லை. தமிழ் நாட்டு மக்கள் மிகவும் தெளி வான மக்கள். எந்த சித்தாந்தத் திற்கு ஓட்டுப் போட வேண்டும் என மக்களுக்குத் தெரியும். அண்ணாமலை பேசுவதை யெல்லாம், தமிழ்நாட்டில் யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வில்லை.
அரசியல் மாற்றம் ஏற் படத் தேவை உள்ளது. இளை ஞர்களை வைத்து கட்டமைப்ப தற்கான ஒரு தளத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. எனது தொகுதியில் இருக்கும் பிரச்சனைகளைத் தாண்டி யும், அவர்களுக்கு அரசியலில் பங்கீடு கொடுக்க வேண்டியதற் கான முயற்சி எடுப்பேன். எந்த ஜென்மத்திலும் தமிழ்நாட்டில் பாஜகவின் கனவு பலிக்காது.” இவ்வாறு சசிகாந்த் செந்தில் பேசியுள்ளார்.