சென்னை, ஆக. 12 - ஒன்றிய அரசு பாரபட்சமான முறையில் பொது நிதி விதிகளில் மேற்கொண்ட திருத்தங்கள் பாரத் மிகுமின் நிறுவனம் (BHEL) உள்ளிட்ட அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், அண்டை நாடுகளிலிருந்து மூலப்பொருட்கள் வாங்குவதற்கு கடுமை யான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில், ‘பெல்’ (BHEL) நிறுவனம் மட்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில், இந்த பிரச்சனையில் தலையிட்டு கட்டுப்பாடு களை உடனடியாகக் களைவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் திங்களன்று (12.08.2024) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
இந்நிலையில், இந்த பிரச்சனையில் தலையிட்டு கட்டுப்பாடு களை உடனடியாகக் களைவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் திங்களன்று (12.08.2024) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
பொது நிதி விதிகளில் செய்யப்பட்ட திருத்தம்
பொது நிதி விதிகள் 2017-இன் (General Financial Rules-GFR 2017) மீது, கடந்த 2020 ஜூலையில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள், ‘பெல்’ (BHEL) நிறுவனத்தின் உற்பத்தித்திறன் மீது ஏற்படுத்தியுள்ள நாசகர தாக்கத்தை தாங்கள் ஆய்வு செய்திட வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்த திருத்தங்கள், இந்திய அரசாங்கம் இந்தியாவுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளில் இருந்து ஏலதாரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு வழிவகை செய்கிறது. தேசிய பாதுகாப்பு, இராணு வம் என்கிற அடிப்படையில் இந்தக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படுகிறது.
பொதுத்துறைக்கு கட்டுப்பாடு; தனியாருக்கு தடையில்லை..!
இந்த விதிகள் பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள், தன்னாட்சி முகமைகள், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் பொது-தனியார் கூட்டுத் திட்டங்கள் (Public Private Partnership Projects) ஆகியவற்றிற்குப் பொருந்தும். மாநில அரசாங்கங்களும் இந்த திருத்தப்பட்ட நிதி விதிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம், இந்த விதிகள் தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தாது; இந்தியாவுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கோ, அந்த நாடுகளின் வர்த்தக முகமைகளுடன் வர்த்தகம் செய்வதற்கோ தனியாருக்கு எந்தவிதத் தடையும் கிடையாது.
ரூ. 1.40 லட்சம் கோடிக்கு பெறப்பட்ட ஆர்டர்
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக 63.17 சதவிகித பங்குகளுடன் தொடங்கப்பட்ட ‘பெல்’ நிறுவனம், நாடு முழுவதிலும் இன்றைக்கு 16 உற்பத்தி நிலையங் களைக் கொண்டிருக்கிறது; தமிழ்நாட்டில் திருச்சி, ராணிப்பேட்டை, திருமயம் ஆகிய இடங்களில் உள்ள 3 உற்பத்தியகங்களும் இவற்றில் உள்ளடக்கம். இந்தியாவின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் ‘பெல்’ நிறுவனத்திற்கு முக்கிய பங்குள்ளது. தற்போதை க்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் ‘பெல்’ நிறுவனத்தின் கைவசம் இருக்கின்றன. இந்த ஆர்டர்கள் அனைத்தும் L1 என்கிற குறைந்தவிலை ஏலதாரர் அடிப்படையில், (Lowest Bidder), முழுக்க முழுக்க ‘பெல்’ நிறுவன செயல்திறன் மீதான மதிப்பீடுகளின் அடிப்படையில், எவ்வித சிபாரிசும், தலையீடும் இன்றி ‘பெல்’ நிறுவனத்தால் பெறப்பட்டவை. 15 முதல் 20 சதவிகிதம் அளவிற்கு குறைக்கப்பட்ட விலையில் L1 அடிப்படையில் இந்த ஆர்டர்கள் பெறப்பட்டன.
அரசின் புதிய விதிகளால் நெருக்கடியில் ‘பெல்’
‘பெல்’ நிறுவனம் முந்தைய காலங்களில் பெற்றுவந்ததைப் போல, எல்லைப் பகிர்வு நாடுகளில் இருந்து மூலப்பொருட்களைத் தருவிக்கலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்த ஆர்டர்கள் வகுக்கப்பட்டு, பெறப்பட்டன. ஆனால், பொது நிதி விதிகளில் (GFR) கொண்டுவரப்பட்ட புதிய திருத்தங்கள், பிற நாடுகளில் இருந்து 20 முதல் 40 சதவிகிதம் அளவிற்கு கூடுதல் விலையில் மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ‘பெல்’ நிறுவனத்தைத் தள்ளியுள்ளன. இதன் விளைவாக, குறைவான லாபம் என்ற அடிப்படையில் பெறப்பட்ட இந்தப் புதிய ஆர்டர்களில் இருந்து ‘பெல்’ நிறுவனத்துக்கு துளிலாபமும் கிடைக்காது.
ரூ. 6 ஆயிரம் கோடி தண்டம் கட்டும் சூழல்!
‘பெல்’ நிறுவனம் கொதிகலன்களை (பாய்லர்கள்) உற்பத்தி செய்வதற்குத் தேவையான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியகங்களை இந்தியாவில் வளர்த்தெடுக்காத காரணத்தால், ‘பெல்’ தனக்கான குறைந்தவிலை மூலப்பொருள் இறக்குமதிக்கு எல்லைப் பகிர்வு நாடுகளை சார்ந்திருக்கும் நிலையில் உள்ளது.
இந்தச் சூழலில், புதிய கட்டுப்பாடுகளால், மூலப் பொருட்களை உரிய நேரத்தில் தருவிப்பது, உற்பத்தி செய்வது, உற்பத்தி செய்த பாய்லர்களை கையளிப்பது என அனைத்துப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன; இதன் விளைவாக குறித்த நேரத்தில் உற்பத்தி செய்து பொருட்களை வழங்காத தவறுக்காக ‘பெல்’ நிறுவனம் 6000 கோடி ரூபாய் தண்டத்தொகை கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கானோரின் எதிர்காலம் கேள்விக்குறி
இவ்வாறு புதிய கட்டுப்பாடுகளால் ‘பெல்’ நிறுவனத்தின் வருவாய் பாதிக்கப்படு வதுடன், அந்த நிறுவனத்தின் 30 ஆயிரம் நிரந்தரப் பணியாளர்கள், 20 ஆயிரம் ஒப்பந்தப் பணியாளர்கள், மற்றும் இவர்களைச் சார்ந்துள்ள லட்சக்கணக்கான குடும்ப உறுப்பினர்களுடைய எதிர்காலமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
புதிய திருத்தங்களால் ஏற்பட்டுள்ள இந்த புதிய நிலைமை, பிரம்மாண்ட பொதுத்துறை நிறுவனமான ‘பெல்’ நிறுவனத்தின் செயல்திறனைக் குறைக்க முற்படுகிறது.
பிரம்மாண்ட நிறுவனத்தை வலுவிழக்கச் செய்துவிடாதீர்
‘பெல்’ நிறுவனத்தின் மீதான இத்தகைய எதிர்மறையான தாக்கம் என்பது சந்தையில் ‘பெல்’ நிறுவனத்துடைய நிலையையும், மதிப்பையும் சரியச்செய்து, தனியார்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
‘பெல்’ போன்ற பிரம்மாண்டமான ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கு ஏற்படுத்தப்படும் இத்தகைய பாதிப்புகள், மக்கள் நல்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளை வலுவிழக்கச் செய்யும் தாக்கங்களைக் கொண்டிருக்கும்.
இந்தப் பின்னணியில், பொதுத்துறை நிறுவனங்கள் மீது பாரபட்சமான கட்டுப்பாடுகளை விதிக்கும் GFR 2017-இல் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை நீக்குவதற்கு வேண்டிய அனைத்தையும் தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
தங்களுடைய இந்தத் தலையீடு ‘பெல்’ நிறுவனத்தை பாதுகாக்கும் என்பதோடு, நம்முடைய மாபெரும் தேசத்தையும், நம்முடைய மக்களையும் பாதுகாத்திடும்.
இவ்வாறு கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.