tamilnadu

img

பெல் ஊழியர்கள் போராட்டம்

ராணிப்பேட்டை, நவ. 29- பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஏர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறு வனங்களை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு  பகுதியாக கடந்த 5 வருடங்களில் சராசரி யாக வருடத்திற்கு 5,000 கோடி முதல் 8,000  கோடி ரூபாய் வரை லாபத்தை பெற்று வரும்  பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவ னத்தை விற்பதற்கான முயற்சிகளில் ஈடு பட்டுள்ளது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் எரிசக்தித் துறையின் தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு ஆதர வாக ராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறு வனம் ஊழியர்கள் அலுவலக வாயிலில் சங்கத்தின் பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொதுச் செயலாளர் நந்தகுமார், தண்டபாணி (ஐஎன்டியுசி), குப்புசாமி (ஏடிபி),  மேற்பார்வையாளர்கள் சங்கச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்  டோர் கலந்து கொண்டனர்.