உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து அவதூறாகப் பேசியதற்காக மன்னிப்பு கேட்டதால், பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூடியூப் சேனல் ஒன்றில் மணிப்பூர் வன்முறை குறித்த பேசிய பத்ரி சேஷாத்ரி, மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும், அவரிடப் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த நிலையில் வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர், கடந்த ஜூலை 29-ஆம் தேதி பத்ரி சேஷாத்ரியை சென்னையில் வைத்து கைது செய்தனர்.
இந்த நிலையில், அவதூறாகப் பேசியதற்காக மன்னிப்பு கேட்டதால், பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.