நாடக கலைஞர் பாதல் சர்க்காரின் பிறந்தநாள் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி வியாழனன்று (ஆக.15) நுங்கம்பாக்கத்தில் சென்னை கலைக்குழுவின் நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. தமுஎகச மத்திய சென்னை காப்பீட்டு ஊழியர் கிளையும், சென்னை கலைக்குழுவும் இணைந்து இந்நிகழ்வை நடத்தின. நீதியரசர் கி.சந்துரு, நாடகவியலாளர்கள் பிரளயன், அம்ஷன் குமார், வெளிரங்கராஜன், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, தமுஎகச மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.