tamilnadu

சனாதன விவகாரம்“அரசியல் அமைப்பு சட்டத்துக்கு ஆதரவாகத்தான் பேசினார்”

சென்னை, நவ.11- சென்னையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை ஞர்கள் சங்கத்தின் சார்பில் நடை பெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். 

 இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பி.கே. சேகர் பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதி மன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் முன்னி லையில் விசாரணை நடைபெற்று  வருகிறது. இந்த வழக்கின் விசார ணையில் அமைச்சர் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தங்களது தரப்பில் வாதங்களை வைத்து வருகின்றனர். அந்த வகையில், திமுக துணைச் செய லாளர் ஆ. ராசா எம்.பி. தரப்பில் மூத்த வழக்கறிஞர் விடுதலை ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், மத உரிமை க்கு எதிராக பேசினார் என்ற ராசா வுக்கு எதிராக குற்றம் சாட்டுகின்ற னர். ஆனால், அரசியல் அமைப்புச் சட்டத்தில் மதத்துக்கு வழங்கப்பட்ட உரிமையை  விட கருத்துரிமைக்கும், பேச்சுரி மைக்கும் தான் அதிக முக்கி யத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, மத உரிமை என்பது  பேச்சுரிமைக்கு கட்டுப்பட்டது தான். அதற்கு அப்பாற்பட்டது கிடையாது. இதை சபரிமலைக்கு பெண்கள் செல்வது தொடர்பான தீர்ப்பில் உச்சநீதிமன்றம்  தெளிவுபடுத்தியுள்ளது.

ஒரு எம்பியின் பதவியை பறிப்பது, தகுதியிழப்பு செய்வது  போன்ற முடிவுகள் நாடாளு மன்றம் தான் தீர்மானிக்கும். தீண்டாமை கொடுமை ஒழிக்கப் பட்டது. பெண்களுக்கு முழு சுதந்திரம் என்று சட்டங்கள் பல  வந்தாலும் சமுதாயத்தில் அவை  எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டதா? என்று பார்க்கும் போது சட்டத் துக்கு நேர்மாறாக தான் இருக்கும்.  அதனால், நசுக்கப்பட்ட மக்களுக்காக சனாதன ஒழிப்பு  கருத்தை ஆ.ராசா முன்வைத்து  பேசியுள்ளார். கம்பராமா யணத்தை தெளிவாக படித்த பின்னர்தான் கம்பரசம் நூலை அண்ணா எழுதினார். திராவிட தலைவர்கள் ஒரு விஷயத்தை எதிர்ப்பதற்கு முன்பு அது குறித்து  தெளிவாக தெரிந்து கொள் வார்கள்.

பெரியார், அண்ணா, கருணா நிதி உள்ளிட்ட தலைவர்கள் திரா விட தலைவர்கள் ஆரிய கொடு மையை நன்றாக தெரிந்து கொண்ட பின்னரே, அதை எதிர்த்துப் போராடினார்கள். அது போல, சாதனத்தையும் சனாதன கொடுமைகளையும் நன்றாக படித்து தெளிவு அடைந்த பின்னரே, அதை ஒழிக்க வேண் டும் என்று ஆ.ராசா தன் கருத்து களை தெரிவித்து பேசியுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இந்த வழக்கு தொடரப் பட்டுள்ளது. ஆனால், அரசியல் மைப்புச் சட்டத்துக்கு ஆதரவாக தான் ராசா பேசியுள்ளார்” என்றார்.