சிதம்பரத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சிலிண்டரை வாடிக்கையாளர்கள் சம்பந்தபட்ட சிலிண்டர் முகவர்களிடம் எப்படி பரிசோதித்து வாங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சுபம் கேஸ் ஏஜன்சியில் நடைபெற்றது. இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதுவை வட்டார மேலாளர் வில்லியம்கேரி, சுபம் கேஸ் ஏஜன்சி நிர்வாக பங்குதாரர் சித்தார்தன், மேலாளர் ஆனந்த், ராகுல் ஆகியோர் கலந்துகொண்டனர். வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு புதிய சிலிண்டர் வாங்கும்போது எப்படி பரிசோதனை செய்யவேண்டும் என்று அறிந்துகொண்டனர்.