புற்றுநோயிலிருந்து குணமடைந்தவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி வடபழனியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு, வெற்றிகரமாக வாழ்க்கையை நடத்துகின்ற சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.பிஜேபி மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திரைப்பட இயக்குநர் அமீர், சவீதா மருத்துவ கல்வி நிறுவன வேந்தர் டாக்டர் வீரய்யன் புற்றுநோய் மருத்துவவியல் துறையின் தலைவரும் பேராசிரியருமான டாக்டர் அனிதா ரமேஷ் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.