tamilnadu

img

ரெட்டியார்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி படுகொலை.... ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் கண்டனம்....

சென்னை:
ரெட்டியார்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதற்கு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு)கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு அவரது குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சம்மேளனத்தின் மாநில தலைவர் வி.குமார், பொதுச் செயலாளர் எம்.சிவாஜி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தென்காசி மாவட்டம்,ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெட்டியார்பட்டியில் வசித்து வந்த ஆட்டோ தொழிலாளிஇசக்கி துரை(37), பால் மாணிக்கம் என்பவரின் மகன்.பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும்இசக்கிதுரை, சில நாட்களுக்கு முன் இரவு நேரத்தில்  ஆட்டோவில் முகப்பு விளக்கு போட்ட பிரச்சனையை  காரணமாக வைத்துஅதே பகுதியைச் சேர்ந்த நபர்கள் ஜாதியவன்மத்தோடு  அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இசக்கி தலித் பகுதியைச் சேர்ந்தவர். எவ்விதகாரணமும் இல்லாமல் முகப்பு விளக்கு போட்டதை பிரச்சனையாக்கி வெட்டிக் கொல்லப்பட்டதை தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) வன்மையாகக் கண்டிக்கிறது.

வன்கொடுமை சட்டத்தில் கைது செய்க!
மேலும் ஆட்டோ தொழில் எவ்வளவு பாதுகாப்பற்ற தொழிலாக மாறியுள்ளது என்பதை இதன் மூலம் பார்க்க முடிகிறது. எனவே காவல்துறை தலையிட்டு, வெட்டிப்படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியகுற்றவாளிகளை கண்டுபிடித்து  வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு)  தமிழக அரசை வலியுறுத்துகிறது. அதோடு இறந்த ஆட்டோ தொழிலாளி யின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும்.மேலும் இவரை நம்பித்தான் அவரது குடும்பம் இருந்தது. எனவே அவரது குடும்பத்தை  பாதுகாக்க அவரதுமனைவிக்கு  அரசு வேலை வழங்குவதை உறுதி செய்வதோடு, குழந்தைகளின் கல்விச்செலவை அரசே ஏற்க  முன்வரவேண்டும்எனவும் தமிழ்நாடு ஆட்டோ  தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) கேட்டுக்கொள்கிறது.