சென்னை, நவ.26- தமிழ்நாடு அரசு ஆட்டிசம் குறை பாடுக்கான சிறப்பு மையத்தை சென்னை கே.கே.நகரில் டிசம்பர் முதல் வாரத்தில் நிறுவ உள்ளது.
இதற்கு முன்னோடியாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை சார்பில் மருத்துவம் , துணை மருத்து வம் ,மறுவாழ்வு பயிற்சி நிபுணர்களுக்கு கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பயி லரங்கம் நடத்தப்பட்டது. ஆட்டிசத்தை இளம்வயதில் முன்கூட்டியே கண்டறிதல், சிகிச்சை, பல்வேறு பயிற்சி முறைகள் பற்றிய வழிகாட்டும் செயல்முறைகள் இதில் விளக்கப்பட்டது.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் இ. தேரணிராஜன் வரவேற்றார். சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையின் செயலாளர் சுப்ரியா சாஹூ, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிகி தாமஸ் வைத்யன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பயிலரங்கில் எம்பிபிஎஸ், முது நிலை மருத்துவ மாணவர்கள், குழந்தை கள் நலமருத்துவர்கள், பேச்சு மொழி பயிற்சியாளர்கள், மருத்துவ உளவிய லாளர்கள், மனநல மருத்துவர்கள், பேரா சிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் என பல்வேறு பின்னணி களைச் சேர்ந்த 125க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.