சென்னை, ஜூலை 25- ஆகஸ்ட் 27 ஆம் தேதி போக்கு வரத்துத் தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப் படும் என்று அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
அரசு போக்குவரத்துக்கழகங்க ளின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட் டில் ஒதுக்க வேண்டும். போக்கு வரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி க்கைகள் தொடர்பாக, தொழிற்சங் கங்கள், போக்குவரத்துக்கழக நிர்வாகிகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர் தனி இணை ஆணையர் எல்.ரமேஷ் முன்னிலையில் நடைபெற்றது.
டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத் தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குனர் எஸ்.நடராஜன், விரைவு போக்கு வரத்துக்கழக மேலாண் இயக்கு னர் ஆர்.மோகன் உள்ளிட்ட அதி காரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே. ஆறுமுக நயினார், ஏஐடியுசி தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண் ணன், நாம் தமிழர் தொழிற்சங்க பேரவை மாநில தலைவர் அன்புத் தென்னரசன், பொதுச்செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சரியான முடிவுகள் எட்டப்படாத நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
எனினும், அடுத்தகட்டமாக வரு கிற ஆகஸ்டு 27 ஆம் தேதி நடை பெற இருக்கும் 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையுடன் இந்த கோரிக்கைகளையும் பேச லாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்களை நிரப்புக!
இது குறித்து பின்னர் செய்தியா ளர்களிடம் சிஐடியு தொழிற்சங்க பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் கூறுகையில், “ஆகஸ்டு 27 ஆம் தேதி நடைபெற உள்ள 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையின் போது அனைத்து விஷயங்களையும் பேசிக்கொள்ள லாம் என அதிகாரிகள் தெரிவித்த னர்.
ஓய்வூதியர்களுக்கான பணப் பலன்கள், அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அரசின் பதிலுக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் கூறி னர். காலிப்பணியிடங்களை நிரந்தர மாக பூர்த்தி செய்ய வலியுறுத்தி னோம். ஆனால் அதற்கான எந்த அரசாணையும் பிறப்பிக்கப்பட வில்லை. மினி பேருந்து சம்பந்த மாக போடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட் டுக்கொண்டுள்ளோம்” என்று தெரி வித்தார்.