tamilnadu

img

சுங்கச்சாவடியில் வேல்முருகன் கார் மீது தாக்குதல்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சென்னைக்கு தனது காரில் வந்து கொண்டிருந்தார். மதுராந்தகம் அருகே தொழுப்பேடு சுங்கச்சாவடியை கடந்த போது, அங்கு பணியில் இருந்த வடநாட்டு ஊழியர்கள் அவரது காரை நிறுத்தி கட்டணம் கேட்டுள்ளனர். அதற்கு, இந்தியா முழுவதும் செல்வதற்கு அனுமதி பெற்ற அட்டையை காண்பித்ததாகக் கூறப்படுகிறது. அதை படிக்கத் தெரியாத அவர்கள் வேல்முருகனின் காரைத் தாக்கியதோடு கார் ஓட்டுநர் பாஸ்கரையும் முகத்தில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேல்முருகன் சுங்கச் சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், ஊழியர்கள் இருவரைக் கைது செய்தனர். மற்றவர்கள் தப்பியோடினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், சுங்கக் கட்டணம் வசூலிக்கும் இடங்களில் உள்ளூர் ஆட்களை பணியமர்த்த வேண் டும் என வலியுறுத்தினார்.

;