tamilnadu

நாத்திகம் பேசுபவர்கள் கோவில்களை இடிப்பதில்லை

சென்னை, ஏப். 5 - பெரவள்ளுரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய திராவிடர்கழக பிரச்சார செயலாளர்  வழக்கறிஞர் அ.அருள்மொழி, பாஜகவினர் கடவுளின் பெயரல் மதக்கலவரங்களை உருவாக்கி பிற மதத்தினரின் கோயில்களை இடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாத்திகம் பேசுபவர்கள்மதக் கலவரங்களை,சாதிக் கலவரங்களை ஏற்படுத்துவதுமில்லை, கோயில்களை இடிப்பதுமில்லை. திமுகவினர் இந்துக்களின் விரோதி எனக் கூறுகின்றனர். ஆனால் திமுக ஆட்சியில்தான்  கோவில்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.எனவே மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் பாஜகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும். அதற்கு இந்த பகுதி மக்கள் கலாநிதி வீராசாமிக்கு வாக்களித்து மகத்தான வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.