tamilnadu

img

கோயம்பேடு மார்க்கெட்டில் சதத்தை நெருங்கும் கேரட் விலை

சென்னை, பிப். 24- சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, தெலுங் கானா, கர்நாடகா, கேரளா,  மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் சனிக்கிழமை 500 லாரிகளில்  காய்கறிகள் விற்பனைக்கு வந்தது.

சனிக்கிழமை அதி காலை வழக்கம் போல் விறுவிறுப்பாக தொடங்கிய காய்கறி விற்பனை, பின்னர்  சந்தைக்கு வரும் சில்லரை  வியாபாரிகள் வரத்து குறைந்ததால் மந்தமானது.

 போனது. வரத்து அதிகரிப் பால் அவரைக்காய், வெண்டைக்காய், புடலங் காய், கோவக்காய் ஆகிய காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்தது. ஆனால் அதேநேரம் வரத்து குறைவு காரண மாக ஊட்டி கேரட், முருங்கைக்காய், முட்டை கோஸ் ஆகிய காய்கறி களின் விலை அதிகரித்தது.

கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லரை விற்பனைக் கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.20க்கும், ஊட்டி கேரட் கிலோ ரூ.90க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ.100க்கும் விற்பனை யானது.