tamilnadu

img

சென்னை மாநகரில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காமல் சென்றால் புகார் அளிக்கலாம்

சென்னை, ஏப். 27- சென்னையில் பேருந்து நிறுத்தத் தில், பேருந்துகள் நிற்காமல் சென்றால் அதுகுறித்து பயணிகள் உடனடியாக  புகாரளிக்கலாம் என சென்னை மாநகர  போக்குவரத்துக் கழகம் தெரிவித் துள்ளது.

மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தினசரி 630க்கும் மேற்பட்ட  வழித்தடங்களில் 2,800 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினசரி 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.

புகார் எண் அறிவிப்பு
பேருந்து நிறுத்தங்களில் முறை யாக நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என ஓட்டுநர், நடத்து நர்களுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத் தல்கள் வழங்கப்படுகின்றன. ஆனா லும் அவ்வப்போது பேருந்து நிறுத்தத் தில் பயணிகள் இருந்தும் பேருந்து களை நிறுத்துவதில்லை என்ற குற்றச் சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இப்படி பேருந்து கள் நிற்காமல் செல்லும்போது, உடனடி யாக 149 என்னும் புகார் எண்ணில் பயணிகள் புகாரளிக்க வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்கு வரத்துக் கழகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வில், சென்னையில் மாநகர போக்கு வரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும்  பேருந்துகள் அட்டவணையிடப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் சென்றால், உடனடியாக பேருந்து வழித் தட எண், பதிவு எண், பேருந்து எங்கிருந்து செல்கிறது, நேரம் மற்றும்  நிறுத்தாமல் சென்ற நிறுத்தத்தின் பெயரரை கட்டணமில்லா தொலைபேசி எண் 149இல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.