சென்னை,டிச.17- மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்களின் குறைகளையும் மனுக்களாக பெற்று 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் மாநிலம் முழுவதும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்களை வார்டு அளவில் மக்களுடன் முதல்வர் என்னும் திட்டத்தின் பெயரால் அறிமுகப்படுத்தி தமிழகம் முழுவதும் திங்க ட்கிழமை (டிச.17) மனுக்களை பெற முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்க ளிலும் மனுக்கள் பெறும் முகாம்கள் நடை பெற உள்ளது. இந்த முகாம்களில் பங்கேற் கும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் மனு அளிக்க வசதியாக கீழ்க்கண்ட வசதிகளை உறுதிப்படுத்தி தரவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
மனுக்களை பெறுகின்ற அனைத்து மையங்களிலும், தரைத்தளத்திலேயே தனி யாக மனுக்களை வாங்குவதற்கான ஏற்பாடு அல்லது கைப்பிடியுடன் கூடிய சாய்வுதள வசதியும், வீல்சேர் வசதியும் ஏற்படுத்த த்தர வேண்டும். எழுதப்படிக்க தெரியாத மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னார்வலர் களை கொண்டு மனுக்களை எழுதிக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மனுக்கள் அனைத்திற்கும் ஒப்புகை சீட்டு வழங்குவதோடு, குறித்த காலத்திற்குள் மனு ஏற்பு அல்லது நிராகரிப்பு குறித்த விபரங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளை அதிக நேரம் காக்க வைக்காமல் முன்னுரிமை அடி ப்படையில் அவர்களது மனுக்களை பெற்றுக்கொள்ள வேண்டும்
இத்திட்டத்தில் பயன்பெற வருகை தரும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் முழுமையாக நிறைவேற்றிதர வேண்டும் என மாநில மாற்றுத்திறனாளிகள் துறை செயலரையும் மாநில மாற்றுத்திறனாளிகள் துறை இயக்குரையும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில குழுவின் சார்பில் கேட்டுக்கொள்வ தாக மாநில தலைவர் தோ.வில்சன் பொது ச்செயலாளர் பா.ஜான்சி ராணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.