tamilnadu

img

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சாஹி நியமனம்

சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிவகித்து வந்த ஏ.பி.சாஹி,சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யலாம் என கொலிஜியம் சமீபத்தில் பரிந்துரை செய்தது. இவர் நவம்பர் 13 ஆம் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகஇருந்த தஹில் ரமணி மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

;