சென்னை, ஜூன் 7- உத்தரபிரதேச மக்கள் தமிழ் நாட்டிற்கு வேலைக்கு வந்ததால் சுயமரியாதை என்னவென்று அவர் களுக்கு தெரியவந்துவிட்டது. அதனால் தான் அவர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்தை பெற்ற போதிலும், பாஜக தனித்து நின்று பெரும்பான்மையை பெறவில்லை. இதனால் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரின் தயவில்தான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. பாஜக வின் இந்த பரிதாப நிலைமைக்கு, உத்தரபிரதேசம் அந்தக் கட்சியை கைவிட்டதே காரணம் என்று கூறப்படு கிறது. மொத்தம் 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் வெறும் 40க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றுள்ளது.
உத்தரபிரதேசத்தை மலை போல் நம்பியிருந்த பாஜகவுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள தொகுதியிலேயே பாஜக தோல்வி அடைந்திருப்பது அக்கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தயாநிதி மாறன் எம்.பி. பேசுகையில், இன்றைக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்றி இருப்பதை இந்தியாவே வியந்து பார்க்கிறது.
ஒரு அரசியல் கட்சி, மக்க ளுக்கான சித்தாந்தத்தையும், மக்க ளுக்கான வளர்ச்சியையும் கொண்டு செயல்பட்டால், மக்கள் அதற்கு எவ்வளவு ஆதரவு அளிப்பார்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். அப்படி இல்லாமல், மக்களை பிளவுப் படுத்தும் சித்தாந்தத்தை வைத்திருந் தால் என்ன நடக்கும் என்பதற்கு பாஜக தான் நல்ல உதாரணம் என்றார். தங்களுடைய இரும்புக் கோட்டையாக இருந்த உத்தரபிரதேசத்தில் பாதிக்கு பாதி தொகுதிகளை கூட பாஜகவால் கைப்பற்ற முடியவில்லை. அத்தனைக் கும் அங்கு பாஜக ஆட்சி தான் நடக்கிறது.
உத்தரபிரதசேத்தில் பாதி பேர் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருகிறார் கள். அதனால் அவர்களுக்கு சுயமரி யாதை என்னவென்று தெரிந்துவிட்டது. அதனால் திரும்பப் போய், பாஜக வுக்கு எதிராக வாக்களித்து விட்டார்கள் என்று கூறினார்.