சென்னை, மார்ச் 3- வரத்து அதிகரித்ததால் சென்னையில் பூண்டின் விலை 3இல் ஒரு பங்காக குறைந்து கிலோ ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று பூண்டு. சைவம், அசைவம் என இரண்டிலுமே பூண்டின் தேவை காலத்திற்கும் மாறா தது. தமிழ்நாட்டில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு பயிரிடப்பட்டாலும், மாநிலத்தின் பெரும் பான்மையான தேவையை ஈடு செய்வதற்கு, மற்ற மாநி லங்களில் இருந்துதான் பூண்டு இறக்குமதி செய்யப் படுகிறது.
தமிழ்நாட்டு மக்கள் பயன் படுத்தும் பூண்டு, பெரும் பாலும் மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப் படுகிறது.
ஆண்டு தோறும் ஜனவரி பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை செய்யப்படும். பொங்கலுக் குப் பின்னர் வட மாநிலங் களில் இருந்து பூண்டு அதி களவில் இறக்குமதி செய்ய ப்படுகிறது. பூண்டு வரத்து குறைவாக இருந்த காரணத் தால், கடந்த ஆண்டு இறுதி யில் ஒரு கிலோ பூண்டு ரூ500 வரை விற்பனை செய்யப் பட்டது.
தற்போது பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால் கோயம்பேடு சந்தை யில் ஒரு கிலோபூண்டு ரூ.160க்கு விற்பனை செய்யப்ப்படுகிறது.