tamilnadu

img

வளர்ச்சிக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது தமிழ்நாடு!

சென்னை, ஜூன் 29- குறு, சிறு மற்றும் நடுத்த ரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை யின் மீது தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடைபெற்ற விவாதங்களுக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் பதில ளித்துப் பேசினார். அப்போது, “முதலமைச்ச ரின் ஓயாத உழைப்பாலும், சீரிய திட்டங்களாலும், சிறந்த  நிர்வாகத் திறனாலும், தொழிற் துறையில் இந்திய அளவில் தமிழ்நாடு உள்நாட்டு உற்  பத்தியில் 9.07 விழுக்காடு பங்களித்து 2-ஆம் இடத்தி லும், ஏற்றுமதியில் 9.5 விழுக்  காடு பங்களித்து 3-ஆம் இடத்  திலும் உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,  “தமிழ்நாட்டில் 26 லட்சத்து 61  ஆயிரம் குறு, சிறு மற்றும்  நடுத்தர தொழில் நிறுவனங்  கள் பதிவு செய்யப்பட்டு சுமார் 2 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி  இந்திய அளவில் 2-ஆம் இடத்தில் உள்ளன. இந்த சாதனைகளுக்கு எல்லாம் அடித்தளமாக விளங்குவது இந்த ஆட்சியின் சாதனையே. குறு, சிறு மற்றும் நடுத்த ரத் தொழில் நிறுவனங்கள் துறையில் சமத்துவம், சமூக  நீதி, சமச்சீர் வளர்ச்சி ஆகிய வற்றை குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் அண்ணல்  அம்பேத்கர் தொழில் முன் னோடிகள் திட்டம், குறுங் குழும மேம்பாட்டுத் திட்டம், பெருங்குழும மேம்பாட்டுத் திட்டம், தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம், தமிழ்  நாடு வர்த்தக வரவு தள்ளு படி தளம், அடுக்குமாடி தொழில்  வளாகம் என்று அனைவரும் தொழில் தொடங்க வழி  வகை செய்து வாய்ப்பு  அளிப்பதில் சமத்துவத்தை யும், பெண்கள், பட்டியலி னத்தவர், பழங்குடியினர், சிறு பான்மையினர், மாற்றுத் திற னாளிகள் என எல்லோரை யும் உள்ளடக்கியதாக மாற் றப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில், ரூ. 961 கோடியே 58 லட்சம் மானியத்துடன் ரூ. 2 ஆயி ரத்து 615 கோடியே 30 லட்சம்  வங்கி கடனுதவி வழங்கி 30  ஆயிரத்து 324 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்  களாக உருவாக்கப்பட்டுள்ள னர். இதன் மூலம் 3 லட்சம் நபர்களுக்கு மேல் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட் டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 295 கோடி மதிப்பீட்டில், 512  ஏக்கர் பரப்பளவில் 8 புதிய  தொழிற்பேட்டைகள் தொட ங்கி வைக்கப்பட்டுள்ளன.

248  ஏக்கர் பரப்பளவில் ரூ. 115  கோடியே 53 லட்சம் மதிப்பீட்  டில், திருவள்ளூர், செங்கல் பட்டு, காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், சேலம், தூத்துக்  குடி ஆகிய மாவட்டங்களில், 8 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. குறுந்தொழில்கள் தொடங்கிட நகர்ப்புறங்க ளில் போதிய இடவசதி இல்லாததால், உடனடியாக தொழில் தொடங்கிட அடுக்குமாடி தொழில் வளா கம் கட்டும் திட்டத்தின் கீழ்  சென்னையில், கிண்டி மற்  றும் அம்பத்தூர் தொழிற் பேட்டைகளில், ரூ. 158 கோடி யே 62 லட்சம் மதிப்பீட்டில் 264 தொழில் கூடங்கள் கொண்ட புதிய அடுக்குமாடி  தொழில் வளாகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம், அரிய  கவுண்டம்பட்டியில் ரூ. 24  கோடியே 55 லட்சம் மதிப்பில்  கொலுசு உற்பத்தியாளர் களுக்காக கட்டப்படும் அடுக்குமாடி தொழில் வளா கம் விரைவில் திறக்கப் படும். கிருஷ்ணகிரி, மதுரை,  கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 4 இடங்க ளில், ரூ. 183 கோடியே 96 லட்  சம் மதிப்பீட்டில் அடுக்குமாடி தொழிற்கூடங்கள் கட்டப் பட்டு வருகின்றன” என்று அமைச்சர் தா.மோ. அன்பர சன் தெரிவித்தார்.