tamilnadu

img

கலைஞர் நூற்றாண்டு விழா: சென்னையில் இன்று பொதுக்கூட்டம்

சென்னை, ஜூன் 6- ஒடிசா ரயில் விபத்துக் காரணமாக தள்ளி வைக்கப் பட்டிருந்த முன்னாள் முதல மைச்சர் கலைஞர் கருணா நிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்  னையில் புதனன்று (ஜூன் 7)  நடைபெறுகிறது.கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த சனிக்கிழமை  (ஜூன் 3) நடைபெற்றது. அன்றைய தினம் மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணி யின் தலைவர்கள் பங்கேற் கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் வடசென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஒடிசா ரயில் விபத்தைத் தொடர்ந்து இந்த  பொதுக்கூட்டம் ஒத்திவைக் கப்பட்டது. இந்த நிலையில், இப்பொதுக்கூட்டம் புதன்கிழமை (ஜூன் 7)  நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கருணாநிதியின் நூற் றாண்டு விழா தொடக்கம் என்பதால், ஆண்டு முழுவ தும் கொண்டாட ஏற்பாடு கள் நடைபெற்று வருகின் றன. தமிழ்நாடு அரசு தரப்பி லும், திமுக சார்பிலும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது  நூற்றாண்டு விழாவை யொட்டி பல்வேறு நிகழ்ச்சி கள் நடத்தப்படவுள்ளன.

;