tamilnadu

img

மீட்பு பணிகளுக்காக ராணுவம் வரவழைப்பு

சென்னை, டிச.18 - தென் மாவட்டங்களில் கனமழை யால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ள ராணு வம் வரவழைக்கப்பட்டுள்ளதாக தலை மைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மழைநீர் தேக்கம் மற்றும் அதி  கனமழை காரணமாக நெல்லையில்  போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள் ளது. பல்வேறு பகுதிகளில் மின்சார மும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட இடங்களில் மீட்பு படையினர், மீட்பு  பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், தென் மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகள், மீட்புப் பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், “வரலாற் றில் இல்லாத அளவு கனமழை பெய்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை யில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. 1070 என்ற எண்ணை மக்கள் உதவிக்காக தொடர்பு கொள்ளலாம். இதுவரை 3,863 புகார்கள் வந்துள்ளன” என்று தெரிவித்தார்.

மீட்புப் பணிகளுக்கு கூடுதலாக  ஆட்களை அனுப்பி வைக்கப்பட்டுள் ளனர். அதிகப்பட்சமாக காயல்பட்டி னத்தில் 96 செ.மீ. மழை பெய்துள்ளது.  மாநில அரசு சார்பில் அனைத்து முயற்சி களையும் செய்துள்ளோம். மீட்பு பணிக்கு, ராணுவம், கடற்படை, விமா னப் படையின் உதவி கேட்டுள்ளோம். விரைவில் மீட்பு பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.