ஏப். 12-இல் கோவையில் பொதுக்கூட்டம்
மு.க.ஸ்டாலின் - ராகுல்
ஒரே மேடையில் பரப்புரை
சென்னை, ஏப்.3- மக்களவைத் தேர் தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 12 அன்று தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்கிறார்.
அன்றைய தினம் நெல்லையில் காங் கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆத ரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற் கொள்கிறார். தொடர்ந்து கோவையில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் உடன் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றுகிறார்.
மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் வாழ்த்து!
சென்னை, ஏப்.3- முன்னாள் பிரத மர் டாக்டர் மன் மோகன் சிங், 33 ஆண்டு களாக வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி யிலிருந்து புதனன்று ஓய்வுபெற்ற நிலை யில், அவருக்கு முதல்வர் மு.க. ஸ்டா லின் ‘எக்ஸ்’ பக்கத்தில் வாழ்த்து தெரி வித்துள்ளார்.
“தங்களது பதவிக் காலம் முழு வதும், தன்னடக்கம் அறிவாற்றல் உயர் அரசியல் பண்பு ஆகியவற்றை வெளிப் படுத்தி, கட்சி வேறுபாடின்றி அனை வரது நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளீர்கள். உங்களது தலை மைத்துவம், குறிப்பாகக் கடினமான காலங்களில் நீங்கள் அதை வெளிப் படுத்திய விதம், என்னை உட்பட பல ருக்கும் ஊக்கமாக இருந்துள்ளது.
வாழ்வில் புதிய கட்டத்தை நோக்கித் தாங்கள் அடியெடுத்து வைக்கும் இவ் வேளையில், இந்திய ஒன்றியத்துக்கும் இந்திய மக்களுக்கும் நீங்கள் ஆற்றிய பெருந்தொண்டை எண்ணிப் பெருமை கொள்வீர்கள் என நம்புகிறேன்.
திமுக சார்பாகவும், தமிழ்நாட்டு மக்க ளின் சார்பாகவும் தாங்கள் நல்ல உடல் நலத்தோடும், மகிழ்ச்சியோடும் திகழ வும், அடுத்து தாங்கள் மேற்கொள்ளும் பணிகளில் மனநிறைவெய்தவும் விழை கிறேன். தங்களது அறிவாற்றலாலும், தொலைநோக்குப் பார்வையாலும் தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டுகிறேன்” என்று தனது வாழ்த்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
சிபிஎம் தலைவர்கள் இன்றைய பிரச்சாரம்
கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
மத்திய சென்னை
ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
கள்ளக்குறிச்சி
உ.வாசுகி
மத்தியக்குழு உறுப்பினர்
தஞ்சாவூர்
டி.கே.ரங்கராஜன்
மூத்த தலைவர் - சிபிஐ(எம்)
மதுரை
தோழர் அ.சவுந்தரராசன்
மூத்த தலைவர் - சிபிஐ(எம்)
புதுச்சேரி
ஏப்.9 முதல் 4 நாள் பிரச்சாரம்
தமிழகத்தை சுற்றிச் சுற்றி
வரும் நரேந்திர மோடி!
சென்னை, மார்ச் 3- மக்களவைத் தேர்தல் தேதி அறி விப்பதற்கு முன்பே தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கி விட்ட பிரதமர் நரேந்திர மோடி, மக்களிடம் பெரிய அள விற்கு வரவேற்பு இல்லாவிட்டாலும், இது வரை 5 முறை வந்து சென்றுள்ளார். இந் நிலையில், 6-ஆவது முறையாக ஏப்ரல் 9, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நான்கு நாட்கள், வேலூர், தென் சென்னை, நீலகிரி, கோவை, பெரம்பலூர், விருது நகர் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.
பிளஸ் 2 தேர்வில் தவறான கேள்வி
மதிப்பெண் வழங்க உத்தரவு!
சென்னை, ஏப். 3 - தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்கியுள்ளது. 83 மையங்களில், 40 ஆயிரத்திற்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆண்டு பிளஸ் 2 வேதி யியல் பாடத்திற்கான தேர்வில், 3 மதிப் பெண் பகுதியில் உள்ள கேள்வியே (33-ஆவது கேள்வி) பிழையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதற்கு பதில் எழுத முயற்சித்த மாணவர்களுக்கு ஊக்க மதிப்பெண்ணாக முழு மதிப் பெண் களும் (3 மதிப்பெண்) வழங்க உத்தரவி டப்பட்டு உள்ளது.