tamilnadu

img

86,000 மக்களுக்கு பட்டா வழங்க ஒப்புதல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை,பிப்.10- அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க தமிழ்நாடு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்" ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள்,மாவட்டத் தலைநகர்களில் 57,084 பேர் என மொத்தம் 86,000 ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது. 
6 மாதங்களில் இதனைச் செய்து முடிக்க 2 குழுக்களையும் அமைக்கவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.