சென்னை, ஏப்.21- தமிழகத்தில் ‘இந்தியா’ கூட்ட ணியை ஒருங்கிணைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல் பட்டதாக தமிழக காங்கிரஸ் தலை வர் கு.செல்வப்பெருந்தகை பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்தி யாவின் எதிர்காலத்தை நிர்ணயிக் கும் மக்களவைத் தேர்தலின் முதல் கட்டம் தமிழகத்தில் அமைதியாக 70 சதவீத வாக்குப்பதிவுடன் நடந்து முடிந்திருக்கிறது. ஜனநாயகத்துக் கும், சர்வாதிகாரத்துக்கும் இடையே நடைபெற்ற தேர்தலில் தமிழக மக் கள் பெருவாரியாக ‘இந்தியா’ கூட்ட ணியை ஆதரிக்கும் வகையில் வாக் களித்திருக்கிறார்கள் என்ற உறுதி யான செய்தி மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
தமிழகத்தில் திமுக தலைமையி லான ‘இந்தியா’ கூட்டணியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து செயல் பட்ட பெருமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. தமிழ கத்தின் உரிமைகளையும், நலன் களையும் கடந்த 10 ஆண்டுகளாக பறித்துவந்த பாஜக ஆட்சிக்கு உரிய பாடத்தை புகட்டும் வகையில் முதல் வர் மேற்கொண்ட கடுமையான பரப் புரையால் ‘நாற்பதும் நமதே, நாளை நமதே, நாடும் நமதே’ என்னும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
கூட்டணி கட்சிகளிடையே நல்லி ணக்கத்தையும், ஆரோக்கியமான செயல்பாடுகளையும் உருவாக்கி, வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவ தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக ‘இந்தியா’ கூட்டணியின் தமிழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக் கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக் கும், வாக்குச்சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்ட தொண்டர்களுக்கும் நன்றி, வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.