மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து, பணியின்போது இறந்த பணியாளர்களின் 49 வாரிசுதாரர்களுக்கு (ஒரு ஓட்டுநர் மற்றம் 48 நடத்துநர்களுக்கு) கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை சென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 13) போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். ஏற்கெனவே, 57 வாரிசுதாரர்களுக்கு பணியாளர் நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தற்போது வரை மொத்தமாக 106 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.