பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதருக சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் முறையீடு
கடலூர், ஜூன் 4 - திட்டக்குடி வட்டத்திற்கு உட்பட்ட காந்திநகர், தீவளூர், எழுத்தூர் பழங்குடி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக் கோரி கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் மனு அளித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காந்தி நகரில் 40க்கும் மேற்பட்ட இந்து ஆதியன் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு குடிநீர் உப்பு கலந்து வருவதால் தண்ணீரைக் குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு 4 பேர் மரணம் அடைந்தனர். மேலும் சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும், மின்சார வசதி செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இருட்டில் வாழும் மலைக்குறவர்கள் மேலும், தீவளூர் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட இந்து மலைக்குறவன் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் இன்ற ளவும் மின்சாரம் இல்லாமல் இருட்டில் வாழ்ந்து வருகிறார்கள். எனவே, மக்க ளுக்கு மின்சார வசதியும், குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இத்துடன், திட்டக்குடி வட்டம் எழுத்தூர் கிராமத்தில் வசிக்கும் இந்து மலைக்குறவன் ஆறுமுகம் என்ப வர் மீது ராமநத்தம் காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது. சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பிரகாஷ், வட்டச் செயலாளர் ஏ.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.