tamilnadu

img

வேளாண் சட்ட எதிர்ப்பு மாநாடு: கே.எஸ்.அழகிரி தகவல்....

சென்னை:
மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு விரோதமாக கொண்டு வந்திருக்கும் வேளாண் மசோதாக்களை எதிர்த்து அக்டோபர்மாதம் 11ஆம் தேதி திருவண்ணாமலையில் சிறப்பு மாநாடு நடத்துவதாக தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஜூன் 5 ஆம் தேதி மூன்று அவசரச் சட்டங்களை மத்திய பாஜக அரசு பிறப்பித்தது. விவசாயிகளுக்கு விரோதமான அவசரச் சட்டங்களுக்கு எதிராக பஞ் சாப், அரியானா மாநிலங்களில் விவசாயிகள் நடத்திவரும் போராட் டங்களில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிராக்டர் ஊர்வலத்தின் மூலமாகப் பங் கேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவிப்பின்படி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு
காங்கிரஸ் சார்பாக மாநிலம் முழுவதும் பரவலாக பலகட்ட போராட் டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வருகிற 11ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு எனது தலைமையில் கண்டன மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற இருக்கிறது.இம்மாநாட்டை ஒட்டி விவசாய விரோத சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்? என்கிற நூலை சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. வெளியிடுகிறார்.இந்த மாநாட்டில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்சய் தத், டாக்டர் சிரிவெல்ல பிரசாத், முன் னாள் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் கள், இதர துறைகளின் தலைவர் கள் மற்றும் பெருந்திரளான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.இந்த சட்டங்களுக்குத் தமிழக விவசாயிகளின் கண்டனத்தை பாஜக அரசுக்கு உணர்த்துகிற வகையில் மாநாடு வெற்றிகரமாக அமைந்திட அழைக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.