“கள்ளக்குறிச்சியில் சாராயம் விற்பனை செய்தவருக்கு வேறு ஒரு நபர் மெத்தனால் விநியோகம் செய்துள்ளார். அதன்படி இங்கு கலப்படம் செய்யப்பட்ட சாராயம் விற்பனை செய்யவில்லை. மாறாக, மெத்தனாலை கலந்து கொடுத்ததாகத் தெரிகிறது. மேலும், கல்வராயன்மலையில் தயாரிக்கப்படும் சாராயம் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாதிப்புக்கு காரணமான சாராயம் வெளியூரில் இருந்து கிடைக்கின்ற சாராயம் என தெரிகிறது” என்று தேசிய பட்டியலின ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் பேட்டியில் கூறியுள்ளார்.