tamilnadu

img

மேலும் 35 ஊழியர்களுக்கு பாதிப்பு...  சென்னை மாநகராட்சியை மிரட்டும் கொரோனா....  

சென்னை
தமிழகத்தின் தலைநகர் மண்டலமான சென்னை கொரனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மே, ஜூன் மாதங்களில் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்கு மேல் இருந்ததால் மொத்த பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்தது. எனினும் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த 3 வாரங்களாக தினசரி பாதிப்பு (1500-க்குள்) சற்று கட்டுக்குள் உள்ளது.

குறிப்பாக இரவு பகல் பாராமல் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு பணியாற்றும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அதிகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 5 நாட்களில் தலைமைப் பொறியாளர் உட்பட மேலும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 400-யை கடந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  

;