ஆகஸ்ட் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016 செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை எதிர்த்து திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உள்ளாட்சிதேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை 5 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான மாநில தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோரை நியமித்து தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து இன்று வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை 2வது வாரத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவடையும்